உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், கைத்தறி தொழிலதிபர் சுனில் குரோவர் மற்றும் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன், தங்கள் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து உயிரிழக்க செய்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் எழுதிய 33 பக்கம் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் கடன் அளித்தவர்கள் பணம் கேட்டு தொல்லை அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




