அமெரிக்க அதிபர் டிரம்பின் தனிப்பட்ட ஈகோவே இந்தியா மீதான 50% வரி விதிப்பு என அமெரிக்க முதலீட்டு வங்கியான ‘Jefferies’ அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், “தனது நோக்கம் நிறைவேறாத காரணத்தால் இந்த வரியை டிரம்ப் விதித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் விரும்பியுள்ளார். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நபர் தலையீடு தேவையில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.




