கேரளா: பாலக்காட்டை சேர்ந்தவர் டாட்டூ கலைஞர் பிபின் (28). இவருக்கும் 15 வயது சிறுமிக்கும் இடையே சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி தனது அந்தரங்க புகைப்படங்களை பிபினுக்கு அனுப்பிய நிலையில், பிபின் அதனை சமூக வலைதளங்கள் மூலம் பலருக்கும் அனுப்பி பணம் பெற்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, எர்ணாகுளத்தில் வைத்து பிபினை போலீசார் கைது செய்தனர். அவர் ஏற்கனவே சிறுமிகளை ஏமாற்றியதாக வழக்கு நிலுவையில் உள்ளது.




