தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் 22 பேரும், கள்ளக்குறிச்சியில் 65 பேரும் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், மேலும் எத்தனை உயிர்களை திமுக அரசு காவு வாங்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி பொற்கால ஆட்சிதானா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.




