தமிழ் சினிமா இயக்குநர் நாராயணமூர்த்தி நெஞ்சு வலி காரணமாக தனது 59வது வயதில் காலமானார். பிரபுதேவா, கவுசல்யா, விவேக், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த ‘மனதை திருடிவிட்டாய்’, ’ஒரு பொண்ணு ஒரு பையன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள அவர் பல சீரியல்களையும் இயக்கியுள்ளார். கடந்த ஒரு வாரமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரின் உயிர் நேற்று (செப்.23) இரவு பிரிந்தது.




