உத்தரப் பிரதேசம்: சுனில் – அதிதீ தம்பதிக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் நேற்று (அக்.05) அதிதீ, கணவர் வீட்டில் அலங்கோலமான நிலையில் இறந்து கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் வரதட்சணை கொடுமையால் சுனில் குடும்பத்தார் தனது மகளை கொன்றுவிட்டதாக அதிதீதியின் தந்தை போலீஸ் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.




