சென்னையில் பிளஸ் 2 மாணவியுடன் ஓரினச்சேர்க்கையில் இருந்த கராத்தே ஆசிரியைக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பி.ஜெயசுதா (28) என்பவருக்கு சென்னை அமர்வு நீதிபதி எஸ்.பத்மா தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறுவதாக கூறி மாணவியுடன் ஆசிரியை பலமுறை தகாத உறவில் இருந்துள்ளார். சென்னையில் உள்ள வீட்டிலும், தூத்துக்குடி அழைத்துச் சென்றும் உல்லாசமாக இருந்தது விசாரணையில் அம்பலமானது.




