வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய

ஒரு வீடு கட்டி குடிபோகும் பொழுது, வீட்டிற்குள் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மனிதன் மண் மீது ஒரு வீடு கட்டி குடிபோகும்பொழுது ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பது மனிதனுக்கு தெரியாது.

ஆனால், சில பறவைகளுக்கு அதை அறிந்து கொள்ளும் ஞானம் நிறைய உண்டு.

சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.

மேலும், ஒரு வீடு கட்டி குடிபோகும் பொழுது, வீட்டிற்குள் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். ஜீவன் என்றால், மனிதன் மட்டுமல்ல, மனிதனைத்தாண்டி சிட்டுக் குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது.

முன்பெல்லாம் நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவர். அதைச்சாப்பிட குருவி இரண்டுவரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும்.

அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக்கொடுப்பர். தூக்கனாங்குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பர். அதை இழுத்துக் கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்.

ஆனால், இப்போது நாம் கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று செய்கிறோம்.

புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதகமான சக்திகளை கொண்டு வருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம்.

இது போன்ற சாதகமான சக்தியைக்கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக்கூடாது, இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.

உங்களுக்கும்
நல்லதே நடக்கட்டும் ….

 

Read Previous

ஒரு கிராம்பு மட்டும் போதும்.. கெட்ட கொலஸ்ட்ராலை ஈசியாக குறைக்கலாம்..!!

Read Next

உடம்பில் உள்ள மொத்த சளியையும் வியர்வை மூலமே வெளியேற்றணுமா??… இத குடிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular