இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கி நிறுவனமான ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), தனது பெண் பணியாளர் விகிதத்தை 2030-ம் ஆண்டுக்குள் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது. பாலின சமநிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வங்கி நிர்வாக இயக்குனர் (மனிதவளம்) கிஷோர் குமார் போலுடாசு தெரிவித்துள்ளார்.




