உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பலே கல்யாண ராணி காஜல் என்பவர், ஹரியானாவின் குருகிராமில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இவர்,
திருமணமாகாத வசதிபடைத்த பல ஆண்களைக் காதலித்து, திருமணம் செய்து, பணம், நகைகள் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவருடைய தந்தை பகத் சிங், தாய் சரோஜ் தேவி, சகோதரி தமன்னா, சகோதரர் சூரஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த திருமணத்திற்கு திட்டம் தீட்டி வந்த காஜல் இனி சிறையில் கம்பி எண்ணப் போகிறார்.




