அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (அக். 16) எX தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ரஷ்ய எண்ணெய் வாங்குவது தொடர்பாக டிரம்ப் முடிவெடுக்கவும், அறிவிக்கவும் மோடி அனுமதிப்பதாக” குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் பற்றிய டிரம்ப் கருத்துக்கு பிரதமர் இதுவரை மறுப்பு தெரிவிக்காதது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.




