ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா, உடல்நலக்குறைவால் ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 101 வயதில் உயிரிழந்தார். இவர் 1994 முதல் 1996 வரை பிரதமராக பதவி வகித்தார். குறிப்பாக, 1995 ஆகஸ்ட் 15 அன்று இவர் வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை மிகவும் பிரபலமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் ராணுவத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்காக மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.




