பயமா?.. பாசமா?.. சண்டை போடும் மனைவியிடம் பெரும்பாலான கணவர்கள் சரண்டர்..!! படித்ததில் பிடித்தது..!!

எனக்கு தெரிந்த பெண்ணுக்கு திருமணம் முடித்து மூன்று வயதில் ஒரு ஆண்குழந்தை உண்டு.. அவள் கணவர் மிகுந்த அமைதி சுபாவம் கொண்டவர்..

இந்த பெண்ணோ எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு அவள் கணவரை வார்த்தைகளால் வதைப்பவள்..அவள் மாமியார் மாமனார் வயது முதிர்ந்தவர்கள்.. தன் மகனின் ஆதரவால் தான் இருக்கிறார்கள்.. இருவரும் உடல்நிலை சரியில்லதவர்கள்..

இந்த பெண்ணோ அவள் கணவரிடம் நான் என் பெற்றோரை விட்டுவிட்டு தானே உன்னுடன் வந்திருக்கிறேன்.. அது போல நீயும் உன் பெற்றோரை விட்டுவிட்டு வா நாம் தனிக்குடித்தனம் சென்றிடலாம் என்று சண்டையிடுகிறாள்..

அவள் கணவரோ என்னை என்ன வேண்டுமானாலும் திட்டு நான் ஒன்றும் சொல்லமாட்டேன்.. ஆனால் என் பெற்றோரை மட்டும் தனியாக விட்டுவிட்டு வா என்று மட்டும் சொல்லாதே என்று கெஞ்சுகிறான்..

இதில் ஒரு ஆண் அவன் மனைவியிடம் சரண்டர் ஆக காரணம் பாசமோ.. பயமோ.. இல்லை..தன் பெற்றோரை பிரிந்து செல்லவேண்டிய நிலை வந்துவிடுமோ என்றும்..தன்னால் குடும்பம் இரண்டு பட்டுவிடும் என்ற எண்ணத்திலும் தான்..

கணவனாவன் தன் மனைவியிடம் எதிர்வாதம் செய்யாமல் அமைதியாக சரண்டர் ஆக காரணம்..குடும்பம் பிரியாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணமே காரணம்…

#மனைவி தன்னுடைய அம்மா அப்பாவை எப்படி கவனித்துக் கொள்கிறார்களோ..

அதேபோல மாமனாரையும் மாமியாரையும் கவனித்துக் கொண்டால் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது…

Read Previous

நளன் – தமயந்தி கதை.. படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பச்சை மிளகாய், இஞ்சி, மல்லி இலை சட்னி..!! இப்படி செஞ்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular