கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அதிமுக, பாஜக, தவெக சார்பில் இன்று (நவ., 4) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல், தவெக சார்பிலும் செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.




