மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான இணையவழிப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை, மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமாரிடம் நேற்று (டிச., 30) மனு அளித்தது. கால்நடை பராமரிப்புத் துறை, பொது சுகாதாரத் துறை மூலம் உரிய பரிசோதனை மேற்கொண்டு அனுமதிச் சீட்டு வழங்கப்பட வேண்டும் என்றும், மாடுபிடி வீரா்களுக்கு காப்பீடு, காயமடைந்த வீரர்களுக்கு நிதியுதவி, உயிரிழந்தால் ரூ.2 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.




