கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்..!! பெண்களே கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

சில விதிகள் ஏற்ப கோலமிட்டால்
வாழ்க்கையில் வளம் சேரும்.
சூரியன் உதிப்பதற்கு முன்பு
பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.
வீட்டு வாசலில் மகாலட்சுமி
வாசம் செய்வதாக ஐதீகம்
எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.
தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ
கோலம்போடக்கூடாது.
கோலம் போட்டதும் காவி இடுவது
மும்மூர்த்திகளை குறிக்கும்.
சாணத்தின் பசுமை விஷ்ணுவையும்,
கோலமாவின் வெண்மை பிரம்மாவையும்
காவியோட செம்மை சிவனையும் குறிக்கிறது.
கோலத்தின் நடுவில் செம்பருத்தி,
பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.
வியாழக்கிழமை துளசி மாட கோலம்,
வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம்
சனிக்கிழமை பவளமல்லி கோலம்
பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம்
ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம்,
திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம்
செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம்,
புதன் மாவிலைக்கோலம்
ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம்
போடுதல் நல்லது.
வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம்
தீய சக்திகளை உள்ளே விடாது.
விழா நாட்களில் இழை கோலம் போடுவது சிறப்பு .
கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால்
திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
அமாவாசை மற்றும்
இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில்
வாசலில் கோலம் போடக் கூடாது.
அந்த ஆத்மாக்களை வீட்டினுள்
அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும்.
அதனால் நம் முன்னோர்கள்
நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில்
வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து,
அவர்களை வீட்டினுள் அனுமதித்து
ஆசி பெறுவது நல்லது.
.இடது கையால் கோலம் போடக்கூடாது.
பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும்.
உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.
கணவர் வெளியில் செல்லும் முன்பே
கோலம் போட்டுவிடவேண்டும்.
கோலம் போட்ட பிறகே
அடுப்பு பற்றவைக்க வேண்டும்.
ஆள்காட்டி விரலை நீக்கியே
கோலம் போட வேண்டும்.
கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால்
கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.

Read Previous

எந்தெந்த பழங்களில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா..??

Read Next

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular