2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு ரூ.248 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. ஆனால் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ரொக்க பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ரூ.3000 ரொக்க பரிசு குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜன.02) வெளியிடுவார் என அரசு வட்டாரங்கள் கூறி வருகின்றன.



