சென்னையில் இன்று (ஜன.06) முதல் காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கும் திட்டத்தை டாஸ்மாக் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது. பொதுவெளியில் பாட்டில்கள் வீசப்படுவதைத் தவிர்த்து சுற்றுச்சூழல் மாசை குறைப்பதே நோக்கம். மது வாங்கும்போது ரூ.10 கூடுதலாக செலுத்தி, காலி பாட்டிலை கடையில் ஒப்படைத்தால் அந்த தொகையை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறலாம்.




