சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 31 முதல் காணாமல் போன சிறுமி, கோஸ்ரா கிராம வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு ஆதாரங்களை மறைக்க கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.




