கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் வழங்கியுள்ளது. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு சம்மன் வழங்கப்பட்டு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். இந்நிலையில் விஜய்க்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் அந்த சாமானில் குறிப்பிடப்பட்டுள்ளது.




