திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்தவர் வரதராஜன் (51). இவரது மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள சக்திவேல் (42) என்பவரை காதலித்து வந்ததால், மகளை வரதராஜனே கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து வரதராஜன் உத்தரப்பிரதேசத்தின் காசிக்கு தப்பியோடியுள்ளர். அவரைப் பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.




