உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகரில் முட்டை குழம்பு சமைப்பது தொடர்பான சண்டையில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 2025 திருமணம் ஆன இவர்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கிடையே எழுந்த சண்டையின்போது ஆத்திரமடைந்த மனைவி இஷா (23) கணவர் விபினின் (26) நாக்கை கடித்து துப்பியுள்ளார். தற்போது இஷாவை போலீசார் கைது செய்துள்ளனர்.




