கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில், கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த காமாட்சி (25) என்ற இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுத் தப்பியோடிய மகேந்திரன் (65) என்ற முதியவரைப் பிடிக்கக் காவல் துறையினர் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்ததால் அந்த பெண்ணை முதியவர் வெட்டிக்கொன்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




