சாலை விபத்தில் உயிரிழந்த பல் மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1.4 கோடி இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

 

 

2022ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த பல் மருத்துவர் இமயவல்லியின் குடும்பத்துக்கு ரூ.1.4 கோடி இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கில், சரக்கு வாகனம் வேகமாகவும் கவனக்குறைவாகவும் இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்பது உறுதியானதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

 

உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினர் தொடர்ந்த இழப்பீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பவத்தின் சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த பிறகு ரூ.1.4 கோடி இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Read Previous

158 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட அரிய மலர் – அருணாச்சலப் பிரதேசத்தில் விஞ்ஞானிகள் உற்சாகம்..!!

Read Next

மகள் பாதுகாப்புரிமை வழக்கில் விரக்தி: பேருந்து நடத்துநர் தற்கொலை; கேரளாவில் சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular