வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

 

 

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம்–வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

 

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் மற்றும் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Read Previous

கோவையில் யாசகம் கேட்பது போல வீடுகளை நோட்டமிட்ட 5 பெண்கள்? பொதுமக்கள் பிடித்தனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular