ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் பஞ்சாப் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் பெங்களூரில் போட்டி நடந்து முடிந்தது. மழையின் காரணமாக போட்டி 14 ஓவராக மாற்ற பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 95க்கு 9 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், டிம் டேவிட் 50 ரங்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. பௌலிங்கில் பஞ்சாப் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய பஞ்சாப் அணி இதிலும் சிறப்பாக தான் விளையாடியது. வதேரா 33 ரன்கள் எடுத்தார். பௌலிங்கிலும் பெங்களூரு அணி சுமாராக தான் விளையாடியது. இறுதியில் பஞ்சாப் 12.1 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.



