இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் சில விஷயங்களை எல்லாம் வேலை வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பதால் மறந்துவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை. என் நிலையில், ஒரு சில ஆன்மீக குறிப்புகளை எல்லாம் நாம் கடைபிடித்தால் நம் வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி பொங்கும். மற்றும் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தி விலகி நேர்மறை சக்தி அதிகமாகும். இந்த ஆன்மீக குறிப்புகளை கட்டாயமாக நீங்கள் கடைப்பிடித்து பாருங்கள் அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சாப்பாட்டு அரிசியும் கல் உப்பும் குறையாமல் இருக்கும் வீட்டில் தரித்திரம் வராது. அதாவது அரிசியும் கல் உப்பும் முழுவதுமாக தீருவதற்கு முன்னதாகவே நாம் வாங்கி நிரப்பி வைக்க வேண்டும் இவ்வாறு குறையாமல் இருக்கும் வீட்டில் எந்த விதமான தரித்திரமும் வராது என்பது ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. மேலும் காலையில் முதலில் பாலை தொட்டால் ஐஸ்வரியம் பெருகும் என்றும் கூறப்படுகிறது. வீட்டில் லட்சுமி தங்க இரவில் கொஞ்சம் சமையல் அறையில் சாதமாவது தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இதனால் அன்னபூரணி மகிழ்வாள்.
வீட்டின் நிலை வாசலில் குங்குமம் மற்றும் மஞ்சள் வைக்க வேண்டும் இதனால் தீய சக்திகளும் விஷ பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.. காலையில் படுக்கையில் இருந்து கண் விழித்து அவரவர் உள்ளங்கையில் கண்விழிப்பதை நற்பண்புகளை மற்றும் நற் பலன்களை தரும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.




