இன்றைய தாய்மார்கள் சமைப்பது என்றாலே சில நேரங்களில் பெரிதும் சுமையாக தெரியும் அப்படி ஒட்டும் பட்சத்தில் இரவு நேரத்தில் என்ன சமைக்கலாம் எதை சாப்பிடலாம் என்று யோசிப்பதே வழக்கமாகிவிட்டது..
இரவு நேரங்களில் நமது உடல் உறுப்புகள் ஓய்வு எடுக்கும் நேரம், அந்த நேரத்தில் நினைத்த எல்லாவற்றையும் சாப்பிட்டால் அஜீரண கோளாறு ஏற்படுவது வழக்கம் அதனால் முடிந்தவரை செரிமானத்தை தரக்கூடிய உணவுகள் சாப்பிடுவதனால் விரைவில் செரிமானம் அடைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும், இரவு நேரங்களில் சாப்பிட கூடாத உணவு பிரியாணி, பரோட்டா, அசைவ உணவுகள்,பூரி, பாஸ்ட் புட், போன்ற உணவுகளை தவிர்த்து இட்லி, இடியாப்பம், ஓட்ஸ் கஞ்சி, பழச்சாறு அருந்துதல் விரைவில் செரிமானம் நிகழ்ந்து ஆரோக்கியமான தூக்கத்தை தரும்…!!




