
உடம்பில் உள்ள சளி அனைத்தும் உடனே வெளியேற கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!
பொதுவாகவே சிலருக்கு குளிர்காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துகளை சாப்பிட்டாலும் குணமாகாது. ஒரு சிலருக்கு வீட்டிலேயே வைத்தியம் சாப்பிட்டாலே போதும் உடனே சரியாகிவிடும். அந்த நிலையில் எந்த மருந்து சாப்பிட்டாலும் சரியாகாதவர்கள் கண்டிப்பாக இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க உடம்பில் உள்ள சளி அனைத்தும் உடனே வெளியேறிவிடும்.
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் பிறகு எலுமிச்சை பழத்தையும் அதில் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஓரளவு சூடாக இருக்கும் பொழுது தூங்குவதற்கு முன் இரவில் அரை மணி நேரத்திற்கு முன்பே குடித்துவிட்டு தூங்குங்கள். பின்பு நீங்கள் உறங்கிய பிறகு உங்களுக்கு வியர்வையாக வியர்வை மூலம் உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும். கண்டிப்பாக இதை ட்ரை பண்ணுங்க.