Oplus_131072
கோலம் போடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க இல்லத்தரசிகளே..!!
கோலம் என்பது நம் வழிபாட்டு முறைகளில் ஒன்று காலங்காலமாக நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம் இல்லத்தில் வாசலில் கோலம் போடுவது வழக்கமாக இருக்கிறது. கோலம் போடுவது தமிழர்களின் பண்பாடு என்று கூட சொல்லலாம். இந்நிலையில் இந்த நவீன காலகட்டத்தில் பலரும் தினசரி இல்லத்தில் கோலம் போடுவது இல்லை. நாள்தோறும் கோலமிட்டால் நம் இல்லத்தில் செல்வம் பெருகும் நாமும் சீரும் சிறப்புமோடு வாழலாம்.
அதுமட்டுமின்றி இல்லங்களில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் துர்சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாது அரிசி மாவினால் கோலம் இடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். சுவரொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளை தடுக்கும் வல்லமை கொண்டது. கோலத்தின் எட்டு பக்கங்களிலும் பூக்கள் வைத்தால் திக் பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் சானமிடுவது கிருமி நாசினியாக செயல்படும் மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு இறைவனை தொழுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும் உள்ளத்திற்கு எண்ணற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கும்.




