தஞ்சாவூர் மாவட்டம் எட்டப்புளிக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. மாணவி பெற்றோரிடம் புகார் அளித்ததையடுத்து, அவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியை விஜயாவிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், சரியான நடவடிக்கை எடுக்காததால், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் பாஸ்கர் மற்றும் தலைமை ஆசிரியை விஜயா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் செய்துள்ளனர்.




