கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் வரவழைத்து இன்று (அக்.27) ஆறுதல் தெரிவித்தார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், நடிகர் விஜய் மிகுந்த வேதனையுடன் மன்னிப்பு கேட்டு கொண்டதாகவும், குறிப்பாக இரண்டு குடும்பத்தினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களின் வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக்கொளவதாக அவர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.




