இந்தியா-வங்கதேசம் இடையே உறவுகள் மோசமடைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதுதொடர்பாக ஐசிசி-பிசிபி இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் உறுதியாக கூறியிருந்தது. போட்டி தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், ஆட்டங்களை மாற்றுவது கடினம் என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாததால் மாற்ற முடியாது என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.




