அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர்பான அவதூறு செய்திகளை நீக்குமாறு பல்வேறு செய்தி தளங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் நலன்களுக்காக அரசு அமலாக்கப் பிரிவாக மாறக்கூடாது என்றும், இது மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு ஆபத்தை உருவாக்கும் என்றும் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.




