வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் விதைப் பெருக்கத் திட்டத்தின் கீழ், தரமான பயறுவகை விதைகளை உற்பத்தி செய்யும் உழவர்களை ஊக்குவிக்க கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. உழவர்கள் உறுதியான பாசன ஆதாரம் கொண்டிருப்பது அவசியம். விதை சுத்தீகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படும் விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 80 சதவிகித முன்பணம் வழங்கப்படும். கிராம அளவில் உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.




