ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்..!!

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தி உள்ளார்.

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும்போதும், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும்போதும், நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது சரியாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

படுக்கையில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு..!! பக்தி பரவசமான பெண்..!!

Read Next

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular