2014 ஆம் ஆண்டு ஆதார் நாடு முழுவதும் அவசியம் என்று தொடங்கப்பட்டது, அந்த தொடக்கத்திலிருந்து இன்றுவரை தனி மனிதனுக்கான அடையாளம் ஆதாராகவே இருக்கிறது தமிழக முழுவதும், அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது…
ஆதார் தகவலை இலவசமாக புதுப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது என தமிழக அரசு மற்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது, அத்தகல்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து சரி செய்து கட்டாயமாகும் அந்த தகவலை இலவசமாக செப்டம்பர் 14ஆம் தேதி வரை புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டு வருகிறது இச்சலுகை நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ளது, ஆதாரை புதுப்பிக்காதோர் உடனடியாக இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் அதன் பிறகு புதுப்பித்துக் கொள்ள விரும்புவர்கள் ரூபாய் 50 கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது, பொதுமக்கள் அருகில் உள்ள அரசு இ சேவை மையங்களுக்கு சென்று இதனை தெரிவித்துக் கொள்ளலாம்…!!



