தெலங்கானா: ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் அனில் குமார். மனைவி சாய் லட்சுமி. இவர்களுக்கு கேதன் கார்த்திகேயா, லாஸ்யத வள்ளி (2) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதில் மகன் கேதனுக்கு பேச்சு தெளிவாக வரவில்லை. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சாய் லட்சுமி, இரட்டை குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர், மாமியார், மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.




