சென்னை தாம்பரத்தில் இரும்புலியூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் வாகனத்தைத் திருடி OLX இணையதளம் மூலம் அவரிடமே விற்க முயன்ற மகாராஷ்டிராவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளிகள் இருவரும் பெருங்களத்தூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.




