முடியை பெண்கள் தங்களது கலாச்சாரத்திற்காக வெகு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்த்து வருகிறார்கள். அது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
பெண்கள் எப்பொலுதும் தந்து தலை முடியை அதிகமாக வளர்க்க ஆசைப்படுவார்கள் அனால் இப்போதோ கட்டையாகவே முடியை வைத்து இருக்கிறார்கள். மேலும் இயற்கையாக முடியை பராமரிப்பது எப்படி மறந்து விட்டார்கள். இது தான் செயற்கை பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய வைக்கிறது.
அனால் இப்பொழுதும் சீனாவில் சேர்ந்த குவாங்சி ஜூவாங்கின் ஹுவாங்லோவோ என்ற கிராமத்தில் ரெட் யாவ் பெண்கள் தனது முடிக்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களின் முடி ஆறு அடிக்கும் மேலாக வளர்க்கப்படுகிறது. இவர்களின் முடியை ஒரு முறை மட்டுமே வேட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இதை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். மேலும் அந்த முடியை தனது பதினெட்டாவது வயதில் மட்டுமே வேட்டுவர்கள்.
இப்படி வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு செழிப்பை ஏற்படுத்துவதாக நம்பபடுகிறது. முடியை கருகருவென அடர்த்தியாக வளர்க்க பாரம்பரிய முறை பயன்படுத்திகர்கள். இயற்கையாக ஷாம்புவை தயாரித்து அதை தங்களது முடிக்கு பயன்படுத்துவார்கள். இந்த பராமரிப்பில் அரிசி நீர், மூலிகைகள், பொமலோ தோல்கள் மற்றும் தேநீர் தவிடு உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்கள் உள்ளடங்கும்.
கொதித்த அரிசி நீரை வைத்து கிளென்சரை தயாரிக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்த மடி கருகரு என்று நீளமாக இருக்க ஒரு பாரம்பரிய பராமரிப்பு முறையும் பின்பற்றுகிறார்கள்.
இவர்கள் கடைகளில் ஷாம்பு வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாகவே ஷாம்பு செய்து பயன்படத்துகின்றனர். அரிசி நீரை கொதிக்க வைத்து கிளென்சரைத் தயாரிக்கிறார்கள். ஒரு பாரம்பரிய மர சீப்பைப் பயன்படுத்தி இந்த கலவையை உச்சந்தலையில் இருந்து கீழ் வரை தடவி குளிக்கிறார்கள். இதுதான் இவர்களின் முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்க்க உதவுகிறது .




