கிழக்கு டெல்லி நந்த் நாக்ரி பகுதியில் ஆகாஷ் என்ற இளைஞர் ரியா என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், ரியா காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஆகாஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (அக்.13) கடைக்கு பொருட்கள் வாங்க வந்த ரியாவை நடுரோட்டில் ஆகாஷ் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர், ஆகாஷ் ரியாவின் வீட்டுக்கு சென்று, ரியாவைக் கொலை செய்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.




