உத்தரப் பிரதேசம்: லக்னோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஷோபித் – சுசிதா தம்பதி மற்றும் அவர்களின் 16 வயது மகள் என தெரியவந்துள்ளது. துணிக்கடை நடத்தி வந்த ஷோபித் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்ததாகவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.




