கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கேட் கீப்பர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், விபத்தின்போது, லெவல் கிராசிங் கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. கேட் கீப்பர் பங்கஜ், கேட்டை திறந்தே வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. முன்னதாக, கேட்டை மூடும்போது வேன் ஓட்டுநர் கேட்டை திறக்கச் சொன்னதாக பொய்யான தகவலை கேட் கீப்பர் கூறியிருந்தார்.




