திருப்பூரைச் சேர்ந்த கீர்த்தி மீனா (21) என்ற பெண், சிவக்குமார் என்பவரை 4 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதை கீர்த்தி மீனா தட்டிக்கேட்டதையடுத்து, சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை தனது மனைவி செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த கீர்த்தி மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.




