நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் பெரிதாக எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனை செல்ல மாட்டார்கள். எந்தவிதமான நோயாக இருந்தாலும் வீட்டிலேயே வைத்தியம் இயற்கை முறையில் பண்ணுவார்கள். அது சரியாக கூட செய்யும். சரியாகாத பட்சத்தில் தான் மருத்துவரை பார்ப்பார்கள். ஆனால் இன்றோ தொட்டதுக்கெல்லாம் மருத்துவமனை செல்கிறோம். இந்நிலையில் காது வலிக்கு முன்னோர்கள் ஒரு சில வைத்தியங்கள் செய்துள்ளனர் அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் முன்னோர்கள் காது வலிக்கு பயன்படுத்திய யுத்தி இதுதான். வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து காது வலியை சரி செய்யலாம். இரண்டு பூண்டு பற்களை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயை சேர்த்து அடைப்பில் வைத்து லேசாக சூடேற்றி பூண்டு கருப்பாக மாறும் வரை காய்ச்சி பிறகு ஆற வைக்கவும். இப்பொழுது எந்த காது வலிக்கிறதோ அதில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் உங்கள் காது வலி குணமாகும். அதுமட்டுமின்றி சிறிதளவு துளசி இலைகளை எடுத்து நசுக்கி அதன் சாறை பிழிந்து எடுத்து வடிகட்டி சிறிதளவு கூட சக்க இல்லாமல் நன்றாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை எந்த காது வலிக்கிறதோ அதில் இரண்டு சொட்டுக்கள் விட்டால் காது வலி பறந்து போகும்.




