இதுவரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், தற்போது நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது.
இதற்காக நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர் கோரியுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் பல அரசு பள்ளி மாணவர்கள் சத்தான காலை உணவைப் பெற்று பயன்பெற உள்ளனர்.




