காலில் விழுந்த பின் முகத்தை மூட கர்சீப் (கைக்குட்டை) எதற்கு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பிய இபிஎஸ் முகத்தை மூடிக்கொண்டு காரில் திரும்பியதை இவ்வாறு சாடியுள்ளார். கரூரில் திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பு இல்லாமல் பழனிசாமி, என்னை ஒருமையில் பேசி வருகிறார். திராவிடம் பற்றி தெரியாது என சொன்னவர் அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு என்றார்.




