தெலங்கானா: வெங்கடேஷ் – பத்மா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த செப்.11-ல் சண்டை முற்றியது. பின்னர் தூங்கி கொண்டிருந்த வெங்கடேஷ் மீது பத்மா கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.16) உயிரிழந்தார். பத்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.




