எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவு காலம் கடந்தாலும் தீவிரவாதிகளின் தாக்குதலும் இந்தியர்கள் அதற்கு பலியாவதும் நிக்கவே இல்லை. அந்த வகையில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் இப்போது நடந்துள்ளது.
காஷ்மீரின் மற்றொரு கருப்பு நாளை உண்டாக்கி இருக்கிறது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதலில் உயிரிழந்திருக்கும் ஒரு கணவனின் உடல் அருகே மனைவி சோகமாக அமைந்திருக்கும் புகைப்படம் இன்டர்நெட்டில் பரவலாக பரவி வருகிறது.
இதை காணும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எதிர் தாக்குதல் செய்ய வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றன. மேலும் இவர்களுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக எக்ஸ் இணையதளத்தில் மக்கள் #WeWantRevenge என்னும் ஹாஸ்டாகை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.




