அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளாது. செப். 22ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் உத்தப்பா ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பா ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.




